உயிர் கொத்திப் பறவை
ஒவ்வொரு நொடியும் – என்
உயிர் குடிக்கும் அவள்
என்னுயிர் குடித்து
அவள் வாழ்கிறாள்
என்ன தாகமோ
என்று அடங்குமோ
பூமியின் உயிர் குடித்து
வளரும் மரம்
கனிகளை மனிதர்களுக்குக்
கொடுப்பதைப் போன்று
என்னுயிர் குடித்து
வளரும் அவள் – அன்பை
அவனிடம் காட்டுகிறாள்