பிரிவு கவிதை

பிரியும் வேளைகளில்

மூச்சுத் திணறலும்
கண்களில் இருட்டும்

இதயத்தில் படபடப்பும்
நெஞ்சில் கனமும்

உடலில் உதறலும்
பேச்சில் குளறலும்

கை கால் நடுக்கமும்
நிலை தடுமாற்றமும்

இருக்குமாம் உயிர்
பிரியும் போது

நானும் உணர்கிறேன்
நீ என்னை விட்டுப்
பிரியும் வேளைகளில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *