என்னவென்று சொல்வேன்?
எவ்வாறு விளக்குவேன்?
எனக்கே தெரியவில்லை
அதிர்ச்சியும் படபடப்பும்
மூச்சு விடும் சிலையாக
அசையாமல் தூரத்தில் நின்று
பூக்கும் உன் புன்னகையை
நோக்கும் என் மனநிலை
கூட்டுப் புழுவிலிருந்து
வெடித்து வெளிவந்து
பறக்கும் வண்ணத்துப்
பூச்சிக்குத்தான் புரியும்