மனிதர்களின் மனதினுள் இருக்கும் தவறான பதிவுகளினால் தான் தீய எண்ணங்கள் உருவாகின்றன. நல்ல விசயங்களை மீண்டும் மீண்டும் பார்க்கும் போதும், கேட்கும் போதும், வாசிக்கும் போதும், அனுபவிக்கும் போதும், மனதின் பதிவுகள் நல்ல பதிவுகளாக மாறுகின்றன.
பழைய தீய பதிவுகள் மறைந்து, புதிய நல்ல பதிவுகள் அதிகரிக்கும் போது, தீய எண்ணங்கள் சுயமாக குறைய தொடங்கி நல்ல எண்ணங்கள் மேலோங்குகின்றன.