ஆரோக்கியம்

சித்தர்கள் கூறிய தண்ணீரை சுடவைக்கும் முறை

Crop unrecognizable housewife placing saucepan on burning stove

சித்தர்கள் கூறிய தண்ணீரை சுடவைக்கும் முறை. தண்ணீரைக் கொதிக்க வைத்து அருந்தக்கூடாது. தண்ணீரைக் கொதிக்க வைத்தால் தண்ணீரில் உள்ள உயிர்ச் சத்துக்கள் அழிந்துவிடும் மற்றும் தண்ணீரில் உள்ள சத்துப் பொருட்கள் அனைத்தும் கெட்டுவிடும் என்று நாங்கள் கூறும் போது. அருட்பெரும் ஜோதி வள்ளலார் அவர்கள் தண்ணீரைக் கொதிக்க வைத்துத்தான் அருந்த வேண்டும் என்று கூறினார்கள் என்று சிலர் சொல்வார்கள்.

தேரையர் என்ற சித்தர் கூட தன் பாடலில்;

“திண்ணமி ரண்டுள்ளே சிக்கல டக்காமல்
பெண்ணின் பாலொன்றை பெருக்காமல் – உண்ணுங்கால்
நீர்கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி யுண்பார் தம்
பேருரைக்கில் போமே பிணி” – என்று கூறுகிறார்

மலம் மற்றும் சிறுநீரை அடக்காமல். பெண் போகத்தில் அதிகமாக ஈடுபடாமல். நீரைக் காய்ச்சியும், மோரை தண்ணீர் கலந்தும், நெய்யை உருக்கியும் உட்கொண்டால், நோய் குணமாகும் என்கிறார். தண்ணீரைக் கொதிக்க வைப்பது நன்மை இல்லை என்றால் ஏன் வள்ளலாரும் மற்றும் சில சித்தர்களும் தண்ணீரை சூடு படுத்தி அருந்த வேண்டும் என்கிறார்கள்?

சித்தர் பாடல்களையும், சித்த மருத்துவ முறைகளையும் ஆராயும்போது, அவர்கள் ஏன் சொல்கிறார்கள்? எதற்காக சொல்கிறார்கள்? என்பதை முதலில் ஆராய வேண்டும். அவர்கள் கூறும் மருந்துகளை எவ்வாறு தயாரிக்க வேண்டும் பின் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பதையும் புரிந்துகொண்ட செய்தால் மட்டுமே அது பயன் தரும்.

வள்ளலாரும் சித்தர்களும் தண்ணீரைக் காய்ச்சி பயன்படுத்த வேண்டும் என்றார்கள் என்பதை மட்டும் வாசித்த பலர், தண்ணீரை எவ்வாறு காய்ச்ச வேண்டும் என்பதைச் சிந்திப்பதில்லை. அவர்கள் கூறியது எந்த நீரை என்பதையும் சிந்திப்பதில்லை. காய்ச்சிய தண்ணீரை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதும் சிந்திப்பதில்லை.

சித்தர்கள் காலத்திலும், வள்ளலார் காலத்திலும் இப்போது நாம் பயன்படுத்தும் நவீன கேஸ் அடுப்புகள் கிடையாது. இப்போது நாம் பயன்படுத்தும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் பாத்திரங்களையும் அவர்கள் பயன்படுத்தவில்லை. அதனால் அந்தப் பாடல்களைப் பார்த்து இப்போது இருக்கும் பாத்திரங்களில் தண்ணீரைக் காய்ச்சினால் அவை மனிதர்களுக்கு உகந்த மருந்தாகவோ, நீராகவோ இருக்காது. அதைவிட முக்கியமான விஷயம் சித்தர்கள் காய்ச்சப் பயன்படுத்தியது குளத்து நீர் அல்லது ஆற்று நீர். அவற்றின் தன்மைகளும் இன்று நாம் பயன்படுத்தும் நீரின் தன்மைகளும் வெகுவாக மாறுபடும்.

தண்ணீரைக் காய்ச்சும் முறை

சித்தர்கள் கூறிய வழிமுறையில் தண்ணீரைக் காய்ச்ச வேண்டுமானால், மண் பானையில் தண்ணீரை நிரப்பி, விறகடுப்பில் அல்லது கரி அடுப்பில் தான் காய்ச்ச வேண்டும்.

விறகு அல்லது கரி அடுப்பில் மண் பானையைப் பயன்படுத்தி தண்ணீரைக் காய்ச்சும் போது. லேசான சூட்டில் மண்பானை மெது மெதுவாக சூடேறும். மண் பானையின் தன்மையும், விறகடுப்பின் உஷ்ணமும், தண்ணீரில் ஒன்றாகச் சேரும் போது மட்டுமே அந்த நீர் மருந்தாக மாறும். மிதமான சூட்டில் சுடுவதால் தண்ணீரின் உயிரும், உயிர்ச் சத்துக்களும் சீர் கெடாமல் இருக்கும்.

இவ்வாறு சூடுபடுத்திய தண்ணீரைச் சுத்தமான மண் குடத்தில் நிரப்பி வைத்து அருந்தலாம். இவ்வாறு தயாரான நீர் உடலுக்கு மிகவும் நன்மையானது.

மற்றபடி சில்வர் பாத்திரங்களில் தண்ணீரைச் சுட வைத்து அருந்துவதும். கேஸ் அடுப்பில் அல்லது அதிகச் சூட்டில் தண்ணீரைச் சுடவைப்பது ஆரோக்கியமற்ற செயலாகும்.