தடுப்பூசிகள் எதனால் ஆபத்தை விளைவிக்கின்றன? தடுப்பூசிகளால் உபாதைகளும் மரணங்களும் ஏற்படுவதற்கு அந்தத் தடுப்பூசிகளில் கலக்கப்படும் இரசாயனங்களும் தாதுக்களும் மற்ற வேதியியல் கூறுகளும் முக்கிய காரணியாக இருக்கின்றன. தடுப்பூசிகளில் கலக்கப்படுபவை:
1. குறிப்பிட்ட நோய் தொடர்புடைய கிருமிகள், அல்லது குறிப்பிட்ட நோயை உருவாக்கக்கூடிய நோய்க் கிருமிகளின் சில கூறுகள்.
2. சில இரசாயனங்கள், தாதுக்கள், நிணநீர்கள்.
3. கலக்கப்படும் கிருமிகள் பல்கிப் பெருகாமல் கட்டுப்படுத்த சில இரசாயனங்கள்.
4. அந்தக் கிருமிகளிலிருந்து புதிய கிருமிகளும் விசக் கூறுகளும் உருவாகாமல் தடுக்க சில இரசாயனங்கள்.
5. அந்தத் தடுப்பூசி தட்பவெப்ப நிலைக்கும் சீதோசன மாறுதல்களுக்கும் ஏற்ப பழுதடையாமல் பாதுகாக்கக் கூடிய சில இரசாயனங்கள்.
6. பல மாதங்கள் மற்றும் வருடங்கள் கெட்டுப் போகாமல் இருக்கத் தேவையான இரசாயனங்கள்.
7. அந்தத் தடுப்பூசியின் தன்மை மாறாமல் இருக்கத் தேவையான வேதியியல் பொருட்கள்.
8. என்று பல்வேறு வகையான கிருமிகளும் இரசாயனங்களும் தாதுப்பொருட்களும் நிணநீர்களும் கலந்து தான் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன.
பல்வேறு வகையான கிருமிகளும் இரசாயனங்களும் தாதுப்பொருட்களும் உடலுக்குள் செல்லும் பொழுது நோய் எதிர்ப்புச் சக்தி பலமாக உள்ளவர்களுக்கு உடலில் பெரிய பாதிப்புகள் உண்டாவதில்லை. அவர்களின் உடலே தடுப்பூசியின் விசக்கூறுகளை உடலிலிருந்து நீக்கி விடுகிறது.
ஆனால் ஏற்கனவே உடல் பலவீனமாக உள்ளவர்களுக்கும், பிற நோய்களுக்காக இரசாயன மருந்துகளை உட்கொள்பவர்களுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும், தடுப்பூசிகள் பெரிய பாதிப்புகளை உருவாக்குகின்றன. இதனால்தான் பல மரணங்களும், நோய்களும், பக்கவிளைவுகளும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு உண்டாகின்றன.
கோவிட்-19 தடுப்பூசி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது அந்தத் தடுப்பூசியில் என்னென்ன விசயங்கள் கலக்கப்படுகின்றன என்ற விவரங்களை உலக சுகாதார அமைச்சின் இந்த இணையப் பக்கத்தில் வாசிக்கலாம்.
https://www.who.int/news-room/feature-stories/detail/how-are-vaccines-developed