இறைவா எனக்கு நீ தந்த வரம்
இப்போதுதான் உணர்கிறேன்
தமிழில் பேசுவதே கொடுப்பினை
எழுதப் படிக்கவும் வரமளித்தாய்
இந்தப் பிறவிக்கு இதுபோதும்
அடுத்த பிறவி இருந்தால் தமிழனாய்
தமிழ் எழுதும் படிக்கும் தமிழனாய்
பிறக்க வரம்கொடு இல்லையேல்
என்னைப் பிறக்காமல் தடுத்துவிடு