ரெய்கி

ரெய்கி தீட்சையும் அதன் பிரதிபலிப்பும்

ரெய்கி தீட்சையும் அதன் பிரதிபலிப்பும். ரெய்கி தீட்சை பெறுபவர்களின், உடலும், மனமும், ஆற்றலும் வெவ்வேறாக இருப்பதால், தீட்சைக்கு பிந்தைய உணர்வும் வெளிப்பாடும் ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறாக இருக்கும்.

ஒரு சிலர் தீட்சையை எளிதாக அப்போதே உணர்ந்து கொள்வார்கள். ஒரு சிலர் தீட்சைக்கு முன்பாக, தீட்சைக்குப் பின்பாக என்ற வித்தியாசத்தை உணர்வார்கள். ஒரு சிலரால் தீட்சைக்குப் பிறகு சில நாட்களில் உடலிலும், மனதிலும், வாழ்க்கையிலும், உண்டாகும் மாற்றங்களை உணர முடியும். ஒரு சிலரால் உணர முடியாமல் போகலாம்.

ரெய்கி தீட்சை பெற்ற மாணவர்கள், தான் பெற்ற தீட்சையை அவசியம் உணர வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. தீட்சையை உணர முடியாவிட்டாலும், தீட்சையில் பெற்ற ஆற்றல் அவர்களின் உடலில் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

தொடர்ந்து ரெய்கி பயிற்சிகளை செய்துவரும் போது, உடலிலும் அவர்களை சுற்றியும் இயங்கும் ரெய்கி ஆற்றலை அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *