நோய்கள்

புண்கள், பருக்கள், கட்டிகள்

புண்கள், பருக்கள், கட்டிகள். விபத்தின் காரணமாகவோ அல்லது மற்ற காரணத்தினாலோ அல்லாமல் உடலில் புண்கள், பருக்கள், கட்டிகள், போன்றவை தோன்றுவதில்லை. ஒரு வேளை எந்த காரணமும் இல்லாமல் உடலில் இவை தோன்றினால் அவை ஏதோ ஒரு தகவலை நமக்குச் சொல்ல முயல்கின்றன என்று பொருளாகும்.

எந்த காரணமும் இல்லாமல் உடலில் தோன்றுகின்ற புண்கள், பருக்கள், கட்டிகள், போன்றவை உடலின் உள்புறத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலைகளையும் மாறுதல்களையும் பாதிப்புகளையும் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. பல வேலைகளில் உடலின் உள்ளே சேர்ந்திருக்கும் கழிவுகளை அகற்றுவதற்காக இவை தோன்றுகின்றன.

புண்கள், பருக்கள், கட்டிகள், போன்றவற்றின் மூலமாக ரத்தத்திலும் உடலிலும் சேர்ந்திருக்கும் கழிவுகள் உடலை விட்டு வெளியேறுகின்றன. சர்க்கரை நோயாளிகளுக்குக் காலில் புண் உருவாவதன் நோக்கமும் இதுதான்.

உடலின் மேற்பரப்பில் காட்டும் அறிகுறிகளைப் புரிந்து கொண்டு உடலுடன் இணைந்து செயல்பட்டு உடலின் உள்ளே இருக்கும் கழிவுகளை வெளியேற்றிக்கொள்ள வேண்டும், உண்மையான நோயைக் கண்டறிந்து குணப்படுத்திக் கொள்ள வேண்டும். அதை விடுத்து உடல் காட்டும் அறிகுறிகளுக்கு மருத்துவம் பார்த்து புண்கள், பருக்கள், கட்டிகள், போன்றவை உடலுக்குள் மறைத்துக் கொண்டாலும் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அப்படியேதான் இருக்கும்.

களிம்புகள் பூசிய பின்னர் இவை மறைந்துவிட்டால், அவை குணமாகிவிட்டன என்று அர்த்தமில்லை மாறாக அவை உடலின் உள்ளே ஓடி மறைந்துவிட்டன என்று அர்த்தம். உடலில் மேலே குறிப்பிட்டவை தோன்றினால், தானாகப் பழுத்து மறையும் வரையில் காத்திருக்க வேண்டும். தேவைப் பட்டால் இயற்கை மருத்துவம் மட்டும் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *