பெரியார் சிறியார் என்பவர்கள் யார்?
பெரியார் சிறியார் என்ற சொற்கள் வயதைக் குறிப்பிடுபவை அல்ல. பெரியார் சிறியார் என்ற சொற்கள் மனிதர்களின் தரத்தையும் தகுதியையும் குறிக்கும் சொற்கள்.
பெரியார் என்பவர் எந்த விசயத்தையும் சிந்தித்து ஆராய்ந்து செய்பவர். சிறியார் என்பவர் எந்த விசயத்தையும் சிந்திக்காமல் மனம் போன போக்கில் செய்பவர்.
ஒரு விஷயத்தை முழுதாக கற்றுக் கொள்ளாமல் அரைகுறையாக மனம் போன போக்கில் செய்பவர்கள்; எந்த விசயத்திலும் வெற்றி பெற மாட்டார்கள் என்பதைத்தான் “சிறியார் இட்ட வெள்ளாமை, விளைந்தாலும் வீடு வந்து சேராது” என்பார்கள்.