ஆரோக்கியம்

ஊசி செலுத்திக்கொண்ட பிறகு காய்ச்சல் உருவாவது ஏன்?

மருத்துவரிடம் ஊசி செலுத்திக்கொண்ட பிறகு காய்ச்சல் உருவாவது ஏன்? மருத்துவரிடம் சென்று நோய்களுக்கான மருந்து ஊசி செலுத்திக் கொண்டாலோ, தடுப்பூசி செலுத்திக் கொண்டாலோ பல குழந்தைகளுக்கு காய்ச்சல் உருவாகும். இந்தக் காய்ச்சல் உருவாக காரணம் என்ன? குழந்தைக்கு ஊசி செலுத்தியவுடன் காய்ச்சல் உருவானால், செலுத்தப்பட்ட ஊசியில் கலந்திருக்கும் இரசாயனங்களோ கிருமிகளோ அந்தக் குழந்தையின் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று அர்த்தம். அந்த ஊசியில் கலந்திருக்கும் உடலுக்கு ஒவ்வாத இரசாயனங்களையும் கிருமிகளையும் கொல்வதற்காகத்தான், உடலானது தனது உஷ்ணத்தை அதிகரிக்கிறது. உடலின் உஷ்ணம் அதிகரித்து அதன் மூலமாக நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரித்து, அந்தக் கிருமிகளையும் இரசாயனங்களையும் எதிர்த்து உடல் போராடுகிறது. காய்ச்சல் என்பது உடலில் நன்மைக்காக மட்டுமே உருவாகும் என்பதை பெற்றோர்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

யாருக்காவது காய்ச்சல் உருவாகி, அந்த காய்ச்சல் அதிக நாட்கள் இருந்தால் மருத்துவர்கள் என்ன சொல்வார்கள்? இது வைரஸ் காய்ச்சல், கிருமி காய்ச்சல், கிருமி தோற்று என்று கூறுகிறார்களா இல்லையா? கிருமி காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், என்று மருத்துவர்கள் பெயர்கள் வைத்திருக்கும் போதே நமக்குத் தெரியவேண்டும், கிருமிகள் உடலுக்குள் சென்றால் காய்ச்சல் உண்டாகும் என்பது. எந்த காரணத்துக்காக மருத்துவர்கள் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க சொல்கிறார்களோ, அதே காரணத்துக்காகத்தான் கிருமிகள் உடலுக்குள் செல்லும் போது காய்ச்சல் உண்டாகிறது, கிருமிகளைக் கொல்வதற்கு.

காய்ச்சலைக் கட்டுப்படுத்த கொடுக்கப்படும் மருந்துகளும் ஊசிகளும் குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியைக் கொன்று, ஊசியில் இருக்கும் குழந்தையின் உடலுக்குத் தீங்கான, கிருமிகளும், இரசாயனங்களும், உடலிலேயே தங்கிவிட துணைபுரிகிறது. இன்று உடலில் தேங்கும் இந்த கிருமிகளும் இரசாயனங்களும் பின்னாட்களில் கொடிய நோய்களாக குழந்தைகளின் உடலில் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது.

சில குழந்தைகளுக்கு சிறுவயதில் காய்ச்சல் கண்ட பிறகு பேச்சு வராமல் போவதற்கும், பார்வைக் கோளாறுகள் உண்டாவதற்கும், மூளை வளர்ச்சி குறைவதற்கும், கை கால்கள் செயல் இழப்பதற்கும், இடுப்புக்குக் கீழ் செயல்படாமல் போவதற்கும் இது போன்ற ஊசிகளில் இருக்கும் இரசாயனங்களும் கிருமிகளுமே முக்கிய காரணமாக அமைகின்றன. முடிந்த வரையில் உங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகள் கொடுக்காதீர்கள், குறிப்பாக ஊசியை செலுத்தாதீர்கள்.

ஒரு வேளை குழந்தைகளுக்கு காய்ச்சல் உண்டானால், ஈரத்துணியை நனைத்து தலையிலும், முகத்திலும், நெஞ்சிலும், துடைத்து விடுங்கள். ஒரு துணியை ஈரமாக்கி நெற்றியில் பற்றுப் போடுங்கள். உணவு ஏதும் கொடுக்காதீர்கள். காய்ச்சல் படிப்படியாக குறைந்துவிடும். ஒருவேளை மருத்துவம் தேவைப்பட்டால், இயற்கை மருத்துவத்தை மட்டும் நாடுகள் இரசாயனங்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X