முதுமை வந்தால் நோய் உண்டாகும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. 100 வயதிலும் மனிதர்களால் ஆரோக்கியமாக வாழ முடியும். வயது என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமே தேய்மானம் அல்ல. இறைவன் வாழ்வின் இறுதி நாள் வரையில் பயன்படுத்தவே இந்த உடலைக் கொடுத்திருக்கிறார். நாம் ஆரோக்கியமாக வாழ்ந்தால் உடலில் எந்த பழுதும் நேராது.