தேடித் தேடி தேடியே
தொலைந்து போனவர் பலர்
ஓடி ஓடி ஓடியே
ஓய்ந்து போனவர் பலர்
நடந்து நடந்து நடந்தே
களைத்துப் போனவர் பலர்
நீ எதையுமே
தொலைக்கவில்லை
தேடாதே
நீ சென்று சேரவேண்டிய
இடமும் இல்லை
பயணிக்காதே
மனம்தான் மனிதன்
மனதைப் புரிந்துகொள்
சும்மா இரு மரமாக
மரத்துக்குத்தான்
மனிதனைத் தெரியும்
மனம்தான் உன்
விளைநிலம்
நிலத்தை உழுதுவிட்டு
விதைகளைத் தயார்செய்
மேகத்தைப் பிழிந்து
நீர் எடுக்க யாராலும் முடியாது
மழை வரும்போது வரட்டும்
விளைச்சல் நிச்சயம் உண்டு
காத்திருக்காதே கலைத்துவிடுவாய்
சும்மா இரு சுகம் பெறுவாய்