மருத்துவம்

மருத்துவத்தின் பெயரால் கூறப்படும் தவறான கருத்துக்கள்

தலைப்புகள்

மருத்துவத்தின் பெயரால் கூறப்படும் தவறான கருத்துக்கள். மருத்துவர்கள் மத்தியிலும், மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள் மத்தியிலும், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும், நோய்களைப் பற்றிய சில தவறான நம்பிக்கைகள் நிலவுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

குணப்படுத்த முடியாத நோய்கள்

குணப்படுத்த முடியாத நோய்கள் என்று சில நோய்களை மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். அந்த நோய்களைக் கண்டவர்கள், அவற்றை உண்மையிலேயே குணப்படுத்த முடியாது என்று நம்பிக்கை கொண்டு அந்த பயத்தினாலே பல இன்னல்களுக்கு ஆளாகி இறுதியில் இறந்துவிடுகிறார்கள். உண்மையில் அவை அந்த மருத்துவர்களுக்கு குணப்படுத்தத் தெரியாத நோய்களே ஒழிய எவராலும் குணப்படுத்த முடியாத நோய்கள் அல்ல.

பிறவியிலேயே தோன்றினால் ஒழிய குணப்படுத்த முடியாத நோய் என்று எதுவுமே கிடையாது. இந்த உலக மக்களுக்கு உண்டாகும் அனைத்து நோய்களுக்கும் ஏதாவது ஒரு மருத்துவத்தில் நிச்சயமாக தீர்வு இருக்கும். ஆங்கில மருத்துவம் தான் கெதி என்று கிடப்பதினால்தான் பலர் தங்கள் நோய்களுக்குத் தீர்வு காண முடியாமல் திண்டாடுகின்றனர். தங்கள் நோய்களை குணப்படுத்தக்கூடிய சரியான மருத்துவத்தைக் கண்டறிந்து பின்பற்றினால், எல்லா நோய்க்கும் நிச்சயமாக ஒரு தீர்வு கிடைக்கும்.

பரம்பரை நோய்கள்

பரம்பரை நோய் என்று எந்த நோயும் கிடையாது. பெற்றோர்களுக்கு நோய் இருந்தால் அது பிள்ளைகளுக்கும் வர வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. பெற்றோர்களின் பெரும்பாலான நோய்கள், பெற்றோரின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் பிள்ளைகளுக்கே தோன்றுகின்றன. பிள்ளைகள் ஆரோக்கியமாக வாழக் கற்றுக்கொண்டால் எந்த பரம்பரை நோயும் அண்டாது.

தொற்று நோய்கள்

சில நோய்கள் பரவுவதாகவும், தொற்றுவதாகவும் மருத்துவர்கள் கருத்துச் சொல்வார்கள். நோய்கள் தொற்றும் பரவும் என்றால் மருத்துவர்களுக்கு தானே எல்லா நோய்களும் இருக்க வேண்டும். மருத்துவர்களுக்கு ஏன் நோயாளிகளிடமிருந்து எந்த நோயும் தொற்றுவதில்லை? எந்த நோயும் எளிதில் யாருக்கும் தொற்றாது.


காசநோய் பரவும் என்பார்கள் மருத்துவர்கள். காசநோய் கண்டவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். ஆனால் அந்த காச நோயாளிக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவருக்கோ, அந்த மருத்துவமனையில் பணிபுரியும் தாதிகளுக்கோ ஏன் காசநோய் தொற்றுவதில்லை? ஆரோக்கியமான உடல் இருந்தால் எந்த நோயும் யாருக்கும் தொற்றாது.

கிருமிகளால் உண்டாகும் நோய்கள்

கிருமிகளினால் மனிதர்களுக்கு எந்த நோய்களும் உண்டாகாது. கிருமிகளை விட 1000 மடங்கு பலம் வாய்த்தது மனிதர்களின் எதிர்ப்புச் சக்தி. கிருமி நல்லது, கிருமிகள் மனிதர்களுக்குத் தீங்குகளை விளைவிக்காது. நோய்கள் உண்டான பின்புதான் கிருமிகள் தோன்றுகின்றனவே தவிர கிருமிகள் தொற்றியதால் நோய்கள் தோன்றுவதில்லை. கிருமிகளினால் உண்டாகும் நோய்கள் என்பவை வெறும் வணிக நோக்கத்துடன் பரப்பப்படும் வதந்திகளில் ஒன்று.

கொசுக்களால் உண்டாகும் நோய்கள்

கொசுக்களிடம் இருந்தும் நோய்கள் மனிதர்களுக்குப் பரவுவதில்லை. கொசுக்கள் மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சுமே ஒழிய; ஒருத்தரின் இரத்தத்தை மற்றவருக்குச் செலுத்துவதில்லை. கொசுக்கள் உறிஞ்சிய இரத்தம் கொசுவின் வயிற்றுக்குள் சென்றுவிடும். மற்ற நபர்களைக் கடிக்கும் போது வயிற்றில் இருக்கும் இரத்தம் மீண்டும் வெளிவராது.

வியாபார நோக்கத்துக்காக இப்படி ஒரு புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். கொசுக்களால் நோய்கள் பரவும் என்றால், இப்போது ஏன் யாருக்கும் சிக்கின்குனியா வரவில்லை? சிக்கக் காய்ச்சல் வரவில்லை? டிங்கி காய்ச்சல் வரவில்லை? கொசுக்கள் அப்படியே தானே இருக்கின்றன? நோய்களைக் காணவில்லையே ஏன்?

கொசுக்களை விரட்டப் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான கொசு விரட்டிகளினாலும் மனிதர்களுக்கு நோய்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன ஆனால் கொசுக்களினால் அல்ல

முதுமையினால் உண்டாகும் நோய்கள்

முதுமை வந்தால் நோய் உண்டாகும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. 100 வயதிலும் மனிதர்களால் ஆரோக்கியமாக வாழ முடியும். வயது என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமே தேய்மானம் அல்ல. இறைவன் வாழ்வின் இறுதி நாள் வரையில் பயன்படுத்தவே இந்த உடலைக் கொடுத்திருக்கிறார். நாம் ஆரோக்கியமாக வாழ்ந்தால் உடலில் எந்த பழுதும் நேராது.

கால கட்டத்தில் உண்டாகும் நோய்கள்

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பரவும் நோய்கள், உதாரணத்துக்கு சிக்கின்குனியா, டிங்கி, மலேரியா என்று எந்த நோய்களும் கிடையாது. பணம் சம்பாதிக்க சாதாரண காய்ச்சலுக்கு மருத்துவத் துறையினர் வைக்கும் பெயர்கள் தான் இவை.

இரத்த உறவினால் உண்டாகும் நோய்கள்

சொந்தத்தில் திருமணம் செய்வதால் உண்டாகும் நோய்கள் என்றும் எதுவும் கிடையாது. ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இரசாயன மருந்துகளினாலும், சத்து மாத்திரைகளினாலும் சில குழந்தைகள் ஊனமாகப் பிறக்கிறார்கள். அவற்றை மறைக்கவே இப்படி ஒரு புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

தடுப்பூசி போடாததினால் உண்டாகும் நோய்கள்

மனிதர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கிறது (Immune system), அதனால் தடுப்பூசிகள் என்று எதுவுமே தேவையில்லை. அதனால் சிறுவயதில் தடுப்பூசி போடாததினால் எந்த நோய்களும் உண்டாகாது. ஒருவேளை தடுப்பூசி போட்டால் நோய்கள் தோன்ற வாய்ப்புகள் உண்டு.

குழந்தைகளை ஈன்றதினால் உண்டாகும் தொந்தரவுகள்

குழந்தைகளை ஈன்றதினால் எந்தத் தொந்தரவுகளும் உண்டாகாது. பத்து குழந்தைகளை ஈன்ற பாட்டிகள் நம் கண் முன்னே ஆரோக்கியமாக இன்னும் வாழ்கிறார்கள். அவர்களுக்கும் இன்றைய பெண்களுக்கும் ஒரே வித்தியாசம், அந்த பாட்டிகள் எந்த இரசாயன மருந்துகளையும் பயன் படுத்தவில்லை, இன்றைய பெண்கள் பயன்படுத்துகிறார்கள் அவ்வளவுதான்.

சத்து பற்றாக்குறையினால் உண்டாகும் நோய்கள்

உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தையும் உடல் சுயமாகவே உற்பத்தி செய்து கொள்ளும் ஆற்றல் உடையது. அதனால் சத்து பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. முறையாக உணவு உட்கொண்டால் அனைத்து சத்துக்களையும் உடல் சுயமாகவே உற்பத்தி செய்துகொள்ளும்.

உடலில் ஒரு சத்து குறைவாக இருக்கிறது என்றால் உடலுக்கு அந்த சத்து தேவை இல்லை என்று அர்த்தம், நாம் வெளியிலிருந்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இறைச்சிகளை உண்ணாதவர்கள் உடலிலும் கொழுப்பு இருக்கும் அல்லவா? பால் அருந்தாதவர்களுக்கும் உடலில் கால்சியம் இருக்கும் அல்லவா? புரிந்துகொள்ளுங்கள் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தையும் உடல் சுயமாகவே உற்பத்தி செய்துகொள்ளும்.

செரிமானக் கோளாறுகளால் சிலர் உடலில் தெம்பு போதாமல் இருக்கலாம். பசியை உணர்ந்து அளவோடு சாப்பிட்டால் மற்றும் இனிப்பான பழங்கள் சாப்பிட்டாலே உடல் பலமாகும்.

அதிகம் குறைவு

இனிப்பு, உப்பு, கொழுப்பு, இரத்த அழுத்தம், போன்று எதையாவது அதிகமாகவோ குறைவாகவோ இருக்கிறது என்று சொன்னால் அது தவறான கருத்து. இந்த உலகில் அனைவருக்கும் இவை ஒரே சமமான அளவில் இருக்க வேண்டும் என்பது வியாபார நோக்கத்துடன் கூறப்படும் பொய்கள் மட்டுமே. நம்பாதீர்கள், தனிநபர் உடலின் அமைப்புக்கும், வாழ்க்கையின் தேவைக்கும் ஏற்றவாறு தான் இவை அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்.

கழிவு நீக்கம்

சளி, காய்ச்சல், இருமல், வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை இவை வெறும் கழிவு நீக்கம் மட்டுமே இவை நோய்கள் அல்ல. இவை உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் மட்டுமே. இந்த தொந்தரவுகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைத்தால் அந்த மருத்துவர் தவறு செய்கிறார். உடலிலிருந்து வெளியேற வேண்டிய கழிவுகளை உடலின் உள்ளேயே அடக்கி வைக்க முயற்சி செய்கிறார். இந்த செயல் அந்த நபர் கொடிய நோய்களுக்கு ஆளாகத் துணைபுரியும்.

மேலே குறிப்பிடப்பட்ட வற்றைத் தவிர வேறு ஏதாவது தொந்தரவு இருந்தால் மட்டுமே அது நோய். மேலே குறிப்பிடப்பட்ட வற்றைக் கழித்துவிட்டுப் பார்த்தால் 90% மக்கள் நோயாளிகளே அல்ல என்பது உங்களுக்குப் புரியும்.

உலகில் 90% மக்கள் உடலில் நடைபெறும் கழிவு வெளியேற்றங்களை நோய்கள் என்று எண்ணிக்கொண்டு மருத்துவம் செய்பவர்கள். அவர்களின் தொந்தரவுகளுக்குக் காரணம் தவறான வாழ்க்கை முறைகள் மட்டுமே.

தீர்வுகள்

கழிவு நீக்கங்களைத் தடுக்காதீர்கள். பசியையறிந்து பசியின் அளவுக்குத் தக்கவாறு உணவு உட்கொள்ளுங்கள். எல்லா தொந்தரவுகளும் குணமாகும்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின்.

குறள் 942

உரை
இதற்கு முந்தைய வேளையில் உண்ட உணவு முழுதாக செரித்து விட்டதா என்பதை அறிந்து. இப்போது இருக்கும் பசியின் அளவையும் அறிந்து, பசியின் அளவுக்குத் தக்க உணவு உட்கொண்டால். இந்த உடலைப் பாதுகாக்க எந்த மருந்தும் தேவைப்படாது.

ஆரோக்கியமாக வாழ்வோம், ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்குவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X