மனம் மனிதர்களுக்கு நன்மையானதா? தீமையானதா?
ஒரே பாலுக்குள் மோரும், தயிரும், வெண்ணெயும், நெய்யும், கலந்து இருப்பதைப் போன்று ஒரே மனதுக்குள் நன்மையும், தீமையும், கலந்தே இருக்கின்றன. அதே மனதுக்குள்ளே மனிதர்களுக்கு வழிகாட்டக் கூடிய ஒரு ஞானியும் இருக்கிறார்.
மனம் நன்மைகளை நோக்கி பயணிப்பதும் தீமைகளை நோக்கி பயணிப்பதும் அதனுள்ளே பதிந்திருக்கும் பதிவுகளை பொறுத்தே அமைகிறது.