காற்றின் ஈரப்பதத்தை
சிறுகச் சிறுக கோர்த்து
சிறுகச் சிறுக சேர்த்து
பாதுகாக்கும் மேகம்
நேரம் கணிகையில்
சேர்த்த அனைத்தையும்
மடைத்திறந்து பொழியும்
பூமியெங்கும் குளிரும்
சிறுகச் சிறுகச் சேர்த்த
நினைவுகள் அனைத்தையும்
சிறுகச் சிறுக வளர்த்த
ஆசைகள் அனைத்தையும்
உன்மீது பொழிந்துவிட்டேன்
அன்பாக காதலாக கவிதையாக
அவற்றில் நனைவதும்
ஒதுங்கி நிற்பதும்
கடந்துசெல்வதும்
உன் விருப்பம் – ஆனால்
எத்தனை குடைபிடித்தாலும்
மழை ஓயப் போவதில்லை
பொழிந்து கொண்டே இருக்கும்