அன்பையும் ஆறுதலையும்
உச்சரிக்கும் உதடுகள்
அணைத்துக்கொள்ள
தட்டிக்கொடுக்க தயாராக
இருக்கும் கரங்கள்
சாய்ந்துகொள்ள
கதறி அழ இடம்
கொடுக்கும் தோள்கள்
தலைசாய இளைப்பாற
பணிந்திருக்கும் மடிகள்
இவற்றுக்காக உலகில்
எதை வேண்டுமானாலும்
இழக்கலாம்
எதற்காகவும் இவற்றை
இழந்துவிடக் கூடாது