காதல் கவிதை

எது காதல்?

கண்ணில் தொடங்கி
மனதில் மலர்வதா
பார்த்தவுடன் பிடித்துப்
போவதா எது காதல்?

பார்க்கப் பார்க்க
மனதில் நிறைவதா
பழகப் பழக கருத்தில்
கரைவதா எது காதல்?

பார்வை பழக்கம் வழக்கம்
உடல் மனம் அனைத்தையும்
கடந்து உயிரில் உயிரைக்
கரைக்கும் அனைத்தும்
காதல் தானே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *