வாழ்க்கை

என்றால் என்னவென்றால்

என்றால் என்னவென்றால்

அன்பு என்பது என்னவென்றால், தனது மகிழ்ச்சிகரமான வாழ்விற்கு பிற உயிர்களும் காரணம் என்பதை உணர்ந்து கொண்டு பிற உயிர்களுடன் நன்றி பாராட்டுவது.

பாசம் என்பது என்னவென்றால், உன்னை என் உறவாக ஏற்றுக் கொள்கிறேன் என்று சக மனிதர்களுடன் அன்பைப் பகிர்ந்து கொள்வது.

அமைதி என்பது என்னவென்றால், மனித வாழ்க்கையில் அனைத்தும் மாற்றத்துக்கு உரியது என்பதைப் புரிந்து கொண்டு மனச் சாந்தியடைவது.

நிம்மதி என்பது என்னவென்றால், என் வாழ்க்கையில் அனைத்தும் சரியான நேரத்தில் சரியாக நடக்கும் என்று புரிந்துக் கொண்டு தைரியமாக இருப்பது.

அறிவு என்பது என்னவென்றால், கேள்விகள் மீண்டும் மீண்டும் எழும் அளவுக்கு தேடித்தேடி அனைத்தையும் கற்றுக் கொள்வது.

தெளிவு என்பது என்னவென்றால், கேள்விகளுக்கு முடிவே கிடையாது என்பதைப் புரிந்துகொண்டு பார்வையாளராக விலகி இருப்பது.

ஞானம் என்பது என்னவென்றால், தன்னுயிரின் மூலத்தையும் முடிவையும் தானாகத் தேடி, அறிந்து, உணர்ந்துக் கொள்வது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X