தெய்வ வழிபாடுகள் எதற்காக உருவாக்கப்பட்டன?
தனக்கு உதவியாக ஒரு சக்தி இருக்கிறது என்று மனிதர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக தெய்வ வழிபாடுகள் உருவாக்கப்பட்டன. மனிதர்கள் எப்போதும் சக மனிதர்களை எளிதில் நம்பமாட்டார்கள். அதனால்தான் உனக்கு மேலே ஒரு சக்தி உள்ளது, அந்த சக்தி உனக்குத் துணையாக இருக்கும், உனக்கு உதவி புரியும் என்று மனிதர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்கள்.
மேலும் தன் வாழ்க்கையில் ஒரு நல்ல விசயம் நடக்கும் போது அதற்கு உறுதுணையாக இருந்த தெய்வங்களுக்கும் முன்னோர்களுக்கும் நன்றி செலுத்தவும் வழிபாடுகள் உருவாக்கப்பட்டன.