கோவிட்-19 தடுப்பூசியும் உண்டாகும் பாதிப்புகளும். கோவிட்டிற்கான தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட பிறகு பலர் பலவகையான உடல் உபாதைகளுக்கு ஆளானதையும், மரணம் அடைந்ததையும் நாம் செய்தித்தாள்களிலும் இணையப் பக்கங்களிலும் பார்க்கின்றோம். அவ்வளவு ஏன் நம்மைச் சுற்றிக் கூட பாதிக்கப்பட்ட மனிதர்கள் இருக்கலாம்.
உலக சுகாதார அமைச்சும், தடுப்பூசி நிறுவனங்களும், மருத்துவர்களும், அரசாங்கங்களும், கோவிட்டிற்கான தடுப்பூசி பாதுகாப்பானது என்று பிரச்சாரம் செய்யும் போது, பல உபாதைகளும் மரணங்களும் உண்டாவது ஏன்?
கோவிட் தடுப்பூசிகளினால் உண்டான பாதிப்புகளுக்கும் மரணங்களுக்கும் இன்று வரையில் எந்தத் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமும், மருத்துவமனையும், அரசாங்கமும் பொறுப்பேற்றுக் கொண்டதில்லை. எதனால் அவ்வாறான பாதிப்புகளும் மரணங்களும் ஏற்படுகின்றன என்ற விளக்கமும் சொன்னதில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கியதில்லை.
தடுப்பூசி என்றவுடன் அது ஏதோ மனிதர்களின் நோய்களைக் குணப்படுத்தக்கூடிய மருந்து அல்லது நோய்களை அண்ட விடாமல் தடுக்கக்கூடிய மருந்து என்று பலர் எண்ணுகிறார்கள். தடுப்பூசிகளினால் மனிதர்களுக்கு எந்த நன்மையும் கிடையாது என்பதே உண்மை.
தடுப்பூசியால் உபாதைகளும் மரணங்களும் ஏற்படுவதற்கு தடுப்பூசியில் கலக்கப்படும் ரசாயனங்களும் தாதுக்களும் முக்கிய காரணியாக இருக்கின்றன.
தடுப்பூசியில் கலக்கப்படும் ரசாயனங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல், உடலால் ஜீரணிக்க முடியாமல், இரத்தத்தில் கலக்கின்றன. இரத்தம் மூலமாக உடலின் உள்ளுறுப்புகளில் பரவி உள்ளுறுப்புகளைப் பாதிக்கின்றன. உள்ளுறுப்புகளில் உண்டாகும் பாதிப்புகளினால் மரணங்கள் உண்டாகின்றன.
அடுத்ததாக தடுப்பூசியால் உடலில் உண்டாகும் பாதிப்புகளை உடல் சரிசெய்ய முயலும் போது, அந்த இயக்கத்தை கட்டுப்படுத்துவது பெரிய பாதிப்புகளுக்கும் மரணங்களுக்கும் காரணமாகின்றன.
உதாரணத்துக்கு: உடலில் பராமரிப்பு வேலைகள் அல்லது கழிவுகளை வெளியேற்றும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளைகளில் உடலில் வலியும், சோர்வும், அசதியும், காய்ச்சலும், உண்டாகலாம் ஒரு சிலருக்கு வாந்தியும் வயிற்றுப் போக்கும் கூட உண்டாகலாம்.
தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு இவ்வாறான தொந்தரவுகள் உண்டாகும் வேளைகளில், உடல் தடுப்பூசியில் உள்ள அபாயகரமான விசயங்களை வெளியேற்றும் முயற்சியில் இருக்கிறது என்பதை உணர்ந்துக் கொண்டு உடலுடன் ஒத்துழைக்க வேண்டும்.
குறிப்பாக உணவு எதுவும் உட்கொள்ளாமல் காலி வயிற்றுடன் ஓய்வெடுக்க வேண்டும். அதைவிடுத்து உடலில் உண்டாகும் தொந்தரவுகளை நோய் என்று எண்ணி அவற்றைத் தடுப்பவர்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். பராமரிப்பு வேலைகளைத் தடுப்பவர்களே அதிகமாக மரணமடைகிறார்கள்.