அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும், என்பது ஆராய்ச்சிகளின் முடிவு என்ற பெயரில் மருந்து நிறுவனங்கள் கிளப்பிவிட்ட தவறான வதந்திகளில் ஒன்று. அதிகமாக தண்ணீர் அருந்துவது உடலுக்கு நன்மையானது என்று ஆங்கில மருத்துவர்கள் அறியாமையினால் கூறுகிறார்கள்.
உடலின் தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் அருந்தினால், அவை ஒரு சற்று நேரத்தில் சிறுநீராக உடலைவிட்டு வெளியேறிவிடும். அதிகமாக தண்ணீர் அருந்திய பின்னர் சற்று நேரத்திலெல்லாம் சிறுநீர் கழித்த அனுபவம் உங்களுக்கு இருக்கலாம்.
ஆனாலும் சிறுநீரகங்களுக்கு தேவையில்லாத உழைப்பை வழங்குவதால் சிறுநீரகங்கள் விரைவாகப் பழுதடையக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் உடலில் குளிர்ச்சி அதிகரித்து உடலின் இயக்கமும் குறையும். அதனால் தாகம் இல்லாமல் தண்ணீர் அருந்தக் கூடாது.