காதல் கவிதை

ஆளில்லா உலகம்

ஆளில்லாத உணவகத்துக்கும்
ஆளில்லாத திரைப்படத்துக்கும்
ஆளில்லாத கடற்கரைக்கும்
அழைத்துச் செல்வதும்

மனித நடமாட்டம் இல்லாத
அமைதியான தெருக்களில்
உன்னுடன் கைகோர்த்து
நடந்து செல்வதும்

நீயும் நானும் மட்டும்
வாழும், நம் உலகம்
எப்படி இருக்கும் என்பதை
உணர்ந்து கொள்ளத்தான்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *