பிரிவு கவிதை

ஏக்கமும் ஏமாற்றமும்

man wearing white dress shirt near sea

மிஞ்சியது ஏக்கமும்
ஏமாற்றமும் தான்
உன்னை நேசித்தற்கு
நீ தந்த பரிசு

உன் மீது பைத்தியமானேன்
நீயே உலகென வாழ்ந்தேன்
ஒரு கன்னத்தில் அறைந்தாய்
மறு கன்னத்தைக் காட்டினேன்

அதிலும் அரைந்துவிட்டாய்
கன்னத்தில் வலியில்லை
நெஞ்சம் வலிக்கிறது
கண் கலங்குகிறது

உன்னையே தினம்
சுற்றிச் சுற்றி வந்த
மனதிற்குப் புரியவில்லை

உன் அன்பிற்குரியவன்
உன் பாசத்துக்குரியவன்
உன் காதலுக்குரியவன்
நானில்லை என்பது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *